இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் முன்பு சிறந்த முறை யில் இந்தியாவில் செயலாற்றி வந்த நிதி நிறு வனம் ‘ஐடிபிஐ வங்கியாக’ உருமாறியது. தற்போது அதைத் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. Department of investment and assets man agement-ன் தகவல்படி ஐடிபிஐ வங்கியில், ஆயுள் காப்பீட்டுக் கழகம் வைத்துள்ள 49 சதவீத பங்குக ளில் 19 சதவீத பங்குகளையும், ஒன்றிய அரசாங் கம் வைத்துள்ள 45 சதவீத பங்குகளில் 15 சதவீத பங்குகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு, மொத்தமாக தங்களிடம் உள்ள பங்குகளில் 60.72 சதவீதத்தை தனியாருக்கு கொடுக்க உள்ள தாகவும், அதோடு சேர்த்து ஐடிபிஐ வங்கியின் நிர்வாக பொறுப்பையும் மாற்ற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளில் ஏல விளம்பர நிகழ்ச்சிகள்
தனியார் துறை வங்கிகள், அந்நிய வங்கிகள், வங்கி அல்லா நிதி நிறுவனங்கள், மாற்று முத லீட்டு நிறுவனங்கள் அல்லது இந்தியாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங் கள் மட்டுமே ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். மொத்த வைப்பு தொகையில் 51சதவீதம் வரை நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் வைப்புத் தொகையாகவும், மொத்த கடன் தொகையில் வராக் கடன்களுக்காக 97 சதவீதம் வரை ஒதுக் கீட்டுடனும், 1884 கிளைகள் 3400 தானியங்கி இயந்திரங்கள் ஆகியவற்றுடனும் சிறப்பாக இயங்கி வரும் ‘ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்க லுக்கு தயார்ப்படுத்தப்பட்டு’ வருகின்றது. இதுமட்டு மல்லாமல் ஐடிபிஐ வங்கியின் ஐந்து துணை நிறு வனங்களும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக் கின்றன. இந்த வங்கியின் பங்குகளை விற்பதற்கு ‘அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விளம்பர நிகழ்ச்சிகள்’ நடத்தப்பட்டு வருகின்றன. அந்நிய நிறுவனங்கள் ஐடிபிஐ வங்கி யை வாங்குவதற்கேற்றவாறு அந்நிய நேரடி முத லீட்டின் உச்ச வரம்பினை உயர்த்துவதற்கும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதற்காக அரசாங்கம் கார்லைல்குரூப் (Carlyle Group), டிபிஜி கேப்பிடல் (TPG Capital), கத்தோ லிக் சிரியன் வங்கி மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத் தின் முதலாளியான கோடீஸ்வரர் பிரேம் வாஸ்ட்பா ஆகிய உலக முதலீட்டாளர்களை அணுகி உள்ளனர்.
கத்தோலிக்க சிரியன் வங்கியின் முன் நிபந்தனை
கத்தோலிக்க சிரியன் வங்கியின் முதலாளி ஐடிபிஐ-யின் பங்குகளை வாங்கி அந்த வங்கியை கத்தோலிக்க சிரியன் வங்கியுடன் இணைப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார். “அரசாங்கத்தின் முழு பங்கினையும் அளிக்க வேண்டும், எல்ஐசி நிறு வனத்தின் பகுதி பங்குகளை வாங்குவதோடு மட்டு மல்லாமல் அந்த நிறுவனத்தின் மற்ற முதலீடு கள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தொடர வேண் டும், தங்களுக்கு இந்த வங்கியை நிர்வகிப்பதிலும் அதன் நடவடிக்கைகளிலும் முழு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்”- என்பதே கத்தோலிக்க சிரியன் வங்கியின் முன் நிபந்தனை யாக உள்ளது. பொதுத்துறையில் இருந்த இந்திய தொழில் துறை மேம்பாட்டு வங்கி, வளர்ச்சியின் அடிப்ப டையில் உலகின் பத்தாவது பெரிய வங்கியாகும். ‘தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்க ளுக்கு நீண்ட கால நிதி உதவி வழங்கும்’ முதன் மை நிதி நிறுவனமாகவும் இருந்து வந்தது. வணிக வங்கி நிறுவனங்கள், இந்த நீண்ட கால கடன் திட்டங்களால் தோல்விகள் ஏற்படும் என்ற பயத்தில் உள்ளே நுழையாத நேரத்தில் இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி இந்த சேவையை சிறப்பாகச் செய்து வந்தது. ஒன்றிய அரசாங்கத் தால் ஆரம்ப காலத்தில் துவங்கப்பட்ட இந்த தொழில் வளர்ச்சி வங்கிகள் அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்பட்டு உலகம் முழுவதும் சமூக, பொருளாதார வளர்ச்சியில் ஓர் ஊக்கப் பங்கை ஆற்றி வந்துள்ளது. இது இந்தியாவில் தொழில்க ளின் சீரான வளர்ச்சிக்கும், புதிய தொழில் தொடங் குவதற்கான உந்து சக்தியாகவும், ஆழமான மற்றும் துடிப்பான மூலதன சந்தையின் வளர்ச்சிக் கும் பெரிதும் பங்களித்துள்ளது. இந்திய தொழில் துறை மேம்பாட்டு வங்கியிலிருந்து எக்ஸிம் வங்கி மற்றும் எஸ்ஐடிபிஐ (SIDBI) நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டன.
ஒன்றிய அரசின் நிர்ப்பந்தமும் ஐடிபிஐ-யின் சறுக்கலும்
நிதித் துறை சீர்திருத்தங்களுக்கான நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரைகளைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கி 2004இல் வணிக வங்கியாக மாற்றப்பட்டது. ஐடிபிஐ லிமிடெட் அதன் நிதி நிறுவனப் பணி களுக்கு கூடுதலாக வணிக வங்கியாகவும் செயல் பட நிர்ப்பந்திக்கப்பட்டது. முன்னர் சிறிய அளவி லான வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வரை யறுக்கப்பட்ட போட்டியுடன் செயல்பட்டு வந்த வளர்ச்சி நிதி நிறுவனம், விரிந்த வங்கிச் சேவைக்கு மாறுவது கடினமாக இருந்தது. ஐடிபிஐ வங்கி தனது புதிய செயல்பாடுகளில் காலூன்றும் முன்னரே (யுனைடெட் வெஸ்டர்ன்) வங்கியை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. அந்த வங்கி நஷ்டத் தில் இயங்கி ரிசர்வ் வங்கியால் கடன் கொடுக்க தடை செய்யப்பட்டிருந்தது.இந்த நிர்ப்பந்தத்தினால் ஐடிபிஐ வங்கியின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி புரியாத மோசமான கடன்கள் சேர்க்கப்பட்டன. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தால் ‘ஒரு சக்தி வாய்ந்த மேம்பாட்டு நிதி நிறுவனத்திலிருந்து வங்கி யாக மாறியதிலிருந்து’ அதன் பயணம் பெரிய சறுக்கலை சந்திக்கக் கூடியதாக அமைந்தது. உல களாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, பெரிய கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு, குறிப்பாக உள்கட்டமை ப்புத் துறையில் பெரும் முதலீடுகள் செய்துள்ள பின்னணியில், லாபத்தின் அடிப்படையில் சரி வைக் கண்டது.
பெரு நிறுவனக் கடன்கள், தள்ளுபடிகளால்...
2011-12இல் ரூ. 2031 கோடியாக இருந்த லாபம் 2012-13இல் ரூ. 1882 கோடியாகவும் 2013-14 ஆண்டில் ரூ. 1121 கோடியாகவும் குறைந் தது. 2016 ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்ட சொத்துத் தர மதிப்பாய்வில், பெரிய நிறுவனக் கடன் வாங்குப வர்களின் கணக்குகளில் ஏற்பட்ட பெரும் வராக் கடன்கள் காரணமாக ஐடிபிஐ உட்பட அனைத்து வங்கிகளும் மோசமாக பாதிக்கப்பட்டன. 2015-16ஆம் நிதியாண்டில், ஐடிபிஐ வங்கி லிமிடெட் ‘ரூ. 3664 கோடி நஷ்டத்தைச்’ சந்தித் த்தது. மார்ச் 2017 முதல் ரிசர்வ் வங்கி ஐடிபிஐ வங்கியை பிசிஏ (PCA)-ன் கீழ் கண்காணிப்பில் கொண்டு வந்தது. ஐடிபிஐ வங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாட்டு லாபத்தை ஈட்டி னாலும், பெருநிறுவன கடன்களுக்கான ஒதுக்கீடு கள் மற்றும் தள்ளுபடிகள் காரணமாக தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நிகர இழப்பை சந்தித்தன.
சந்தேகத்துக்குரிய வழிகளில் அரசும் ஆர்பிஐயும்
ஐடிபிஐ லிமிடெட் நிறுவனத்தில் ஒன்றிய அரசின் பங்குகளை 51 சதவீதத்திற்கும் கீழே குறைக்கும் முடிவு 2018 பட்ஜெட் உரையின் போது அறிவிக்கப் பட்டது. அரசாங்கம் அதன் நோக்கத்தை நிறை வேற்ற சந்தேகத்திற்குரிய வழிகளைக் கடைப் பிடித்தது. 2019 ஜனவரி 21 அன்று ‘ஐடிபிஐ வங்கி யின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்குவ தற்கும், அதன் மூலம் ஐடிபிஐ வங்கியின் பெரும் பான்மையான பங்குதாரர் ஆகவும்,’ மேலாண் மைக் கட்டுப்பாட்டை பெறவும் நிர்பந்திக்கப்பட்டது. இந்த வங்கி பெரும்பாலும் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரிசர்வ் வங்கி இந்த வங்கியை தனியார் வங்கியாக 21 ஜனவரி 2019 முதல் பின் தேதியிட்டு பட்டியலிட்டது. 2018-19ஆம் ஆண்டில், ‘எல்ஐசி இந்த வங்கிக்கு ரூ. 21,624 கோடியும், செப்டம்பர் 2019இல் மேலும் ரூ.4,743 கோடியும்’ அளித்தது. அதேபோல், 2019 செப்டம்பரில் அரசாங்கம் ரூ. 4,557 கோடி மூலதனத்தை அளித்தது. மூன்று மாதங்களு க்குப் பிறகு, டிசம்பர் 2019இல் நிறுவன முதலீட்டா ளர்களிடமிருந்து ரூ.1,435 கோடியை வங்கி திரட்டி யது. இந்த நடவடிக்கைகளால் பயனடைந்தவர் கள் கடன்களை திருப்பிச் செலுத்தாத பெரும் கார்ப்ப ரேட் நிறுவன முதலாளிகளே. மார்ச் 2021ல் வங்கி நிகர லாபத்தை சந்தித்த பின் ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் மீதான கட்டுப் பாடுகளை தளர்த்தியது.ஐடிபிஐ வங்கியின் ஒட்டு மொத்த பங்கு விற்பனைக்கான வழிமுறை, வங்கி கள் தனியார்மயமாக்கலுக்கு வழி வகுக்கும் என் பதை உணர வேண்டும். இதனால் மக்கள் சார்ந்த பொருளாதாரத்தின் நன்மைகள் சிதைக்கப்பட்டு விடும்.